Labels:

தலித் மாணவன் தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு எதிராக போராட்டம்

கோவையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய அமைப்பின் மாணவர்கள் 50 பேர்கைது !
*************************************************
நீதி கேட்ட மாணவர்கள் கைது !!
ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்தில் முனைவர் இரண்டாமாண்டு பயின்று வந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துள்ளார். இது நிறுவனப் படுகொலை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர்கள் நீதி விசாரணை கோரியும் ,இந்த உயிரிழப்பிற்கு காரணமான கொடியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியும் தேசம் முழுவதும் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு (19.01.15) மாலை 4.30 மணியளவில் ஜனநாயக ரீதியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர மாணவர் முன்னணி ,பெரியார் திராவிட மாணவர் அணி,அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ,சமத்துவ மாணவரணி,மீதேன் திட்டத்திற்கு எதிரான மாணவ அமைப்பு ஆகிய அமைப்புகளை சார்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.





0 comments :

Post a Comment